Sunday, September 23, 2012

பார்வை

வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. வெளியில் நின்று மழையை ரசிக்க மனம் முற்பட்டது.  சமையலறை சென்று ஒரு கப் காபி போட்டுக்கொண்டு ஆவி பறக்க வாசற் படியின் விளிம்பில் நின்று கொண்டேன். மேல் சாரத்தில் இருந்து வழிந்த மழை நீர், முகத்தில் பட்டு வெடித்து சிதறியது. தூரத்தில் தெரிந்த அடர் காட்டு பகுதியில்,  மழை மெல்லிய கண்ணாடி இழை போல மண்ணில் இறங்கிகொண்டிருண்டது. மரங்கள் மழையில் நனைந்து இளமையாக இருந்தன. நான் தங்கி இருந்த காட்டு பங்களாவில் எதோ ஒரு பகுதியில் மழை நீர் அருவி போல இறங்கி எங்கோ பட்டு தெறித்து சிதறிக்கொண்டிருந்தது.

தனிமையில் மழையை ரசிப்பது ஒரு பெண்ணை நிர்வாணமாக ரசிப்பது போல இருந்தது. உடம்பில் உள்ள அத்துணை மயிர்க்கால்களும் ரசனை சுரப்பியாகி, உணர்வை உள்வாங்கி கொள்ளும் ஒரு நிகழ்வாக இருந்தது. உடம்பு சற்று உதறி சிலிர்த்தது. மழையில் நனைந்த மரம், மறுப்பேதும் சொல்லாமல் மீண்டும் மீண்டும் நனைவது போல, காமத்தில் திளைக்க மனம் முற்பட்டது. தனிமையில், மனம் வேறு ஒன்றாக மாறிவிடுகிறது. வீட்டுக்குள் சென்று காபி குடித்த கப்பை கழுவி வைத்து விட்டு, என் உள் அறைக்குள் சென்றேன். மனம் சன்னல் வழியே மழையை எட்டிப் பார்த்தது.

என் படுக்கையில் படுத்துக் கொண்டேன். அருகில் கிடந்த புத்தகம் ஒன்றினை எடுத்து படிக்க முற்ப்பட்டேன். மனம் மீண்டும் மழையை பற்றியே நினைக்க ஆரம்பித்தது. உற்று நோக்கையில் அது மழை பற்றிய சிந்தனை அல்ல என்று பட்டது. அது காமம். வெறி கொண்ட காமம். வெளியில் பெய்யும் மழை போல, பேரிரைச்சலுடன் என் மனதுக்குள் காமம் பொழிந்துகொண்டிருந்தது. புத்தகத்தை வைத்துவிட்டு கண்களை  மூடினேன்.

ஒளி குறைந்த பொழுதில்,   மரங்கள் அடர்ந்த காட்டுக்குள், மழையில் நனைந்த காற்றுடன், தனியாக நடந்துகொண்டு இருக்கிறேன் . தடம் இல்லாமல் மனம் சொல்லும் வழியில் நடக்கிறேன். மழையுடன் மரங்கள் பேசும் ஒலி தவிர வேறு ஒலி ஏதும் இல்லை. மனம் எதையோ தேடிக்கொண்டு சென்றது.  தூரத்தில், மரங்கள் மேல் அமைத்த வீட்டினுள் இருந்து மிக மெல்லியதாக புகை கசிந்து கொண்டிருந்தது. நான் வீட்டை உற்று நோக்குகிறேன். அது மரத்தாலான சிறு குடிசையாக இருந்தது.

சிறிது நேரத்தில், கரிய நிறத்தில், சிலை போல பெண் ஒருத்தி வீட்டினுள் இருந்து வெளியில் வருகிறாள். அவளின் கூந்தல் ஒரு கூடை போல நேர்த்தியாக சுருட்ட பட்டு, காட்டு பூவை செருகியிருந்தாள். முகம் உருண்டை வடிவத்தில் கூர்மையான மூக்கும், சற்று தடித்த மேல் உதடுமாக லட்சணமாக இருந்தாள். மழையில் நனைந்து கொண்டே மேலிருந்து கீழே இறங்கினாள். தன் தடித்த கையினால், முகத்தில் வழிந்த மழை நீரை துடைத்துக் கொண்டாள். அவள்  உடல் முழுவதும் மழை நீர் ஆட்கொள்ள ஆரம்பித்தது. நான் அருகில் இருந்த ஒரு மரத்தின் பின் நின்று கொண்டேன்.

அவள், எனை நோக்கி வருவது போல் இருந்தது. அவளின் அகன்ற தோளின், லட்சணமாக அவளுடைய திரண்ட இரு முலைகள் இருந்தன. கரிய நிறத்தில் முலை காம்புகள் விறைத்து எனை நோக்கி பார்ப்பது போல் இருந்தது. மழை நீர் பட்டு, அவள் சருமத்தில் ஒட்டாமல் உருண்டு ஓடியது. அவள் என் அருகில் இருந்த ஒரு சிறு செடியில் அகன்ற இலைகளை ஆய்ந்து பறித்துக்கொண்டாள். இடுப்பக்கு கீழ் இருந்த ஆடை மழையில் நனைந்து, அவள் குறுகிய இடையில் மழை நீர் பட்டு, அவளின் பருத்த பின் பகுதியினுள் சென்று சேர்த்தன.

மரத்தின் சருகுகளில் என் கால் இடர, சத்தம் கேட்டு ஒரு உக்கிரமான பார்வையுடன்
எனை திரும்பி பார்த்தாள். பேச்சிபாறை கோயிலில் இருந்த தேவி சிலை சட்டென கண் திறந்து பார்த்தது போல் இருந்தது.

உடல் நடுங்க கண் விழித்துக்கொண்டேன். மழை நின்று போயிருந்தது.